புதிய அரசமைப்புக்கு என்ன நடக்கும்? எதிரணிக்கு ஏற்பட்டுள்ள சந்தேகம்!

” புதிய அரசியலமைப்பை இயற்றும் விடயத்தில் வெளிப்படைத்தன்மை அவசியம். நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் ஊடாகவே அதற்கான பயணிகள் இடம்பெற வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் புதிய அரசமைப்பையும் மீளப்பெறவேண்டிய நிலைமை அரசுக்கு ஏற்படும்.” – என்று எதிரணி பிரதம கொறடாவான லக்‌ஷ்மன் கிரியல்ல எம்.பி. தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் வரவு- செலவுத் திட்டத்தின் அமைச்சுகளுக்கான ஒதுக்கீடுகள் தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” புதிய அரசியலமைப்பொன்று உருவாக்கப்படும்பட்சத்தின் அதன் ஊடாக சுயாதீன ஆணைக்குழுக்களின் சுயாதீனம் முழுமையாக பாதுகாக்கப்பட வேண்டும். புதிய அரசியலமைப்பு பற்றி கருத்துகள் வெளிவந்தாலும் அதனை நாம் கண்டதில்லை.

புதிய அரசியலமைப்பை இயற்றும் பணியானது நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் ஊடாகவே முன்னெடுக்கப்பட வேண்டும். சோல்பரியாப்பு, ஶ்ரீமா அம்மையாரால் கொண்டுவரப்பட்ட புதிய அரசமைப்பு, ஜேஆரால் முன்வைக்கப்பட்ட புதிய அரசமைப்பு ஆகியவற்றுக்கான பணிகள் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் ஊடாகவே முன்னெடுக்கப்பட்டன.

ஆனால் தற்போது என்ன நடக்கின்றது, ஜனாதிபதிக்காக வழக்குகளை வாதாடியவர்களை நியமித்து அரசியமைப்பை தயாரிப்பது சரியா, இந்த வழிமுறையில் புதிய அரசியலமைப்பை உருவாக்கினால் அதையும் மீளப்பெற வேண்டிய நிலையே அரசுக்கு ஏற்படும்.

புதிய அரசியலமைப்பு தொடர்பில் நிபுணர் குழுவானது எமது கருத்துகளை கோரி கடிதம் அனுப்பியிருந்தது. 13 ஆவது திருத்தச்சட்டத்தைதவிர ஏனைய விடயங்கள் பற்றி கதைக்குமாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இப்படியான குழு எப்படி அரசமைப்பை தயாரிக்கும்” – என்றார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles