புத்தளம் , கருவலகஸ்வெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்போவ மீனவ கிராமப் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
40 வயதான காயமடைந்த நபர் சிகிச்சைக்காக புத்தளம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
காயம் அடைந்த நபர், பெண் ஒருவருடன் இரகசிய தொடர்பில் இருந்ததாகவும், அந்த பெண்ணுடன் காதலை தொடர்பை பேணிவந்த மற்றுமொரு நபரே இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளார் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் தப்பியோடியுள்ளார். அவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவரை கைது செய்வதற்கான தேடுதல் வேட்டை ஆரம்பமாகியுள்ளது.










