புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் சர்ச்சை குறித்து சிஐடி விசாரணை!

நாட்டில் கடந்த 15 ஆம் திகதி நடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாப்பத்திரம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை சம்பந்தமாக விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

பரீட்சைகள் திணைக்களமும், குற்றப் புலனாய்வு திணைக்களமும் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றன என்று கல்வி அமைச்சு இன்று அறிவித்துள்ளது.

விசாரணைகள் முடிவடைந்த பின்னரே இப்பிரச்சினை தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles