காலஞ் சென்ற இலங்கையின் கானக் குயில் லதா வல்பொலவின் இறுதிச் சடங்குகள்,நாளை 31ஆம் திகதி, புதன்கிழமை, கொழும்பு சுதந்திர சதுக்கத்தில், பூரண அரச அனுசரணையில் இடம்பெறவுள்ளது.
இவ்வறிவித்தலை பொதுநிர்வாகம், உள்ளூராட்சி மன்றங்கள், மாகாண சபைகள் அமைச்சு மற்றும் புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு ஆகியன இணைந்து அறிவித்துள்ளன.
பழம்பெரும் பாடகியான திருமதி லதா வல்பொல (26) தனது 91ஆவது வயதில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
