பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமையை பெற்றுக்கொடுப்பதற்கான விசேட செயல் திட்டம் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இவ்விவகாரத்தைக் கையாள்வதற்கு விசேட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா, கண்டி மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் முதற்கட்டமாக காணி உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்கும், ஏனைய பகுதிகளுக்கும் இதனை பெற்றுக்கொடுப்பது சம்பந்தமாகவும் கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது.










