பேருந்தில் மயங்கிய விழுந்த இளைஞன் உயிரிழப்பு  : கொவிட் தொற்று உறுதி

பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த 29 வயது இளைஞன் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

பேருந்தில் மயங்கிய நிலையில்,  வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியில் குறித்த இளைஞன் உயிழந்துள்ளதாக தெரியவருகிறது.

கெக்கிராவை, மரதன்கடவல, எட்டவீரவெவ பிரசேதத்தில் இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது.

உயிரிழந்த இளைஞன் அனுதாரபுரம் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் அங்கு நடத்தப்பட்ட பி.சீ.ஆர். பரிசோதனையில் இளைஞனுக்கு கொவிட் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த பேருந்தில் பயணித்த அனைவரையும் கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

#CoronaVirus #Death #Anuradhapura #Covid19SL #LKA

Related Articles

Latest Articles