பொகவந்தலாவை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட 5 தோட்டங்களில் 46 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்றிரவு கிடைக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் டின்சின் தோட்டத்தில் 15 பேருக்கும், மோரா தோட்டத்தில் 16 பேருக்கும், பொகவந்தலாவை தோட்டத்தில் மேல் பிரிவில் 9 பேருக்கும், சென் ஜோன் டிலரி தோட்டத்தில் 5 பேருக்கும், கிளானி தோட்டத்தில் ஒருவருக்கும் இவ்வாறு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் கொரோனா வைரஸ் தொற்றியவர்களுடன் தொடர்பில் இருந்துள்ளனர். அதன் அடிப்படையிலேயே பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன், இவர்களுடன் தொடர்பை பேணிய நபர்களும் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.
