பொதுத்தேர்தலில் தனிவழி செல்கிறது மொட்டு கட்சி!

நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தனித்து களமிறங்கும் என்று அக்கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

கட்சி பிரமுகர்களுடன் மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைக்கப்போவதில்லை எனவும் மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டார்.

 

Related Articles

Latest Articles