‘பொருளாதார நெருக்கடி குறித்து எம்.பிக்களை தெளிவுபடுத்த தொடர் நிகழ்ச்சி திட்டம்’

நாட்டில் காணப்படும் பொருளாதார நெருக்கடியின் பாரதூரமான நிலைமை தொடர்பில் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தெளிவுபடுத்த அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைமையின் கீழ் தொடர் நிகழ்ச்சித்திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டும் என குழுவின் உறுப்பினர்களால் முன்மொழியப்பட்டுள்ளது.

அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ த சில்வா தலைமையில் கூடியபோதே இவ்வாறு முன்மொழியப்பட்டது.

இதில் கடந்த யூலை 27ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட “ 2022ஆம் ஆண்டின் அரையாண்டு அரசிறை நிலைமை அறிக்கை” தொடர்பில் நிதி அமைச்சு, திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்த்தன உள்ளிட்ட அதிகாரிகளால் முன்வைப்புக்களுடன் அரசாங்க நிதி பற்றிய குழுவின் உறுப்பினர்களுக்குத் தெளிவுபடுத்தப்பட்டது.

இந்த முன்வைப்புக்களின் போது தெளிவுபடுத்தப்பட்ட பல்வேறு விடயங்கள் காரணமாக இவ்வாறு நாட்டின் பொருளாதார நெருக்கடி தொடர்பில் சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தெளிவுபடுத்தப்பட வேண்டும் என ஆலோசனை முன்வைக்கப்பட்டது.

பணவீக்கம் அதிகரித்தமையால் கடன்களுக்கான வட்டிவீதமும் அதிகரிக்கலாம் என இக்குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ த சில்வா தெரிவித்தார். இதனால் பணவீக்கத்துக்கும் வட்டி வீதத்துக்கும் இடையில் காணப்படும் தொடர்பு குறித்து சகல பாராளுமன்ற உறுப்பினர்களையும் தெளிவுபடுத்தும் நிகழ்ச்சி முதலாவதாக நடத்தப்பட வேண்டும் என அவர் பரிந்துரைத்தார். ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்ற வேறுபாடு இன்றி சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் இதில் கலந்துகொள்வதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் 2019ஆம் ஆண்டு இறுதிக் காலாண்டில் வரி சதவீதம் குறைக்கப்பட்டமையால் அரசாங்கத்தின் வருமானம் குறைந்தமை தொடர்பிலும் இங்கு நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது. அரசாங்கத்தின் வருமானம் குறைவதற்கு கொவிட் தொற்றுநோய் ஏற்படுத்திய தாக்கம் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டிருந்ததுடன், 2022ஆம் ஆண்டு அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles