இந்த வருடத்தின் இதுவரை காலமும் மேற்கொள்ளப்பட்டுள்ள போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் 90 ஆயிரம் பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அவர்களிடமிருந்து பெருந்தொகை ஹெரோயின், ஐஸ் உள்ளிட்ட பல்வேறு போதைப்பொருட்களை கைப்பற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
” கடந்த வருடத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் மூலம் 108,852 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அந்தவகையில்,முழு வருடத்திலும் 1630 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 50,412 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 15,666 கிலோகிராம் கஞ்சாவுடன் 44,271 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 10 கிலோகிராமுக்கு அதிகமாக கொக்ெகய்ன் போதைப்பொருளை வைத்திருந்த இருவரையும் 93 கிலோவுக்கு அதிகமான ஹஸிஸ் போதைப்பொருளுடன் 47 பேரையும் கைதுசெய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதற்கு மேலதிகமாக 377 கிலோ மற்றும் 294 கிராம் ஐஸ் போதைப்பொருள் 25,813 போதைப்பொருள் குளிசைகளை, 119,346 போதைப்பொருள் வில்லைகள் ஆகியவற்றுடன் 14,101 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இந்த வருடத்தில் இதுவரையான காலப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள போதைப்பொருள் சுற்றிவளைப்புக்களின் போது 1427 கிலோ மற்றும் 571 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 44,995 சந்தேகநபர்களும் 9897 கிலோ மற்றும் 745 கிராம் கஞ்சாவுடன் 33,001 சந்தேக நபர்களும் 370 கிலோ மற்றும் 112 கிராம் கொக்ெகய்ன் போதைப்பொருளுடன் 26 சந்தேகநபர்களும் 33 கிலோ மற்றும் 260 கிராம் ஹஸிஸ் போதைப்பொருளுடன் 55 சந்தேக நபர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.










