‘போராட்டங்களால் அரசை வீழ்த்த முடியாதாம்’

நாட்டில் தற்போது தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு இவ்வார காலத்திற்குள் அரசாங்கம் தீர்வு பெற்றுக்கொடுக்கும் என தெரிவித்த முன்னாள் காணி விவகாரத்துறை அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன, போராட்டங்களால் அரசாங்கத்தை ஒருபோதும் வீழ்த்த முடியாது. அரசியல்வாதிகளின் தவறான வழிநடத்தல்களினால் போராட்டம் தீவிரமடைகிறது எனவும் தெரிவித்தார்.

அனுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொருளாதார ரீதியில் நாட்டு மக்கள் பல சிக்கல்களை எதிர்க்கொண்டுள்ளார்கள் என்பதை அரசாங்கம் ஒருபோதும் மறுக்கவில்லை.

எரிபொருள்,எரிவாயு மற்றும் மின்சாரம் ஆகிய சேவைத்துறையில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமைக்கு தீர்வு காணுமாறு உரிய தரப்பினருக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதுடன்,அவை தற்போது செயற்படுத்தப்பட்டுள்ளன.

நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.இவ்வாறான நிலையில் ஒரு தரப்பினர் நாட்டு மக்களை வீதியிலிறக்கி அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை திட்டமிட்டு முன்னெடுத்து வருகிறார்கள்.

போராட்டங்களினால் அரசாங்கத்தை ஒருபோதும் வீழ்த்த முடியாது.

சமூக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு இவ்வார காலத்திற்குள் தீர்வு காண அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.சேதன பசளை கொள்கை திட்டத்தை விரைவாக மாற்றியமைக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளோம்.” – என்றும் அவர் கூறினார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles