போராட்டத்தின்போது கொல்லப்பட்டவரின் நபரின் இறுதிக்கிரியை இன்று – ரம்புக்கனை பகுதிக்கு இராணுவ பாதுகாப்பு

ரம்புக்கனை போராட்டத்தின்போது, பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த கே.பி.சமிந்த லக்‌ஷான் என்பவரின் இறுதிக் கிரியை இன்று இடம்பெறவுள்ளது.

தேவாலேகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாரன்பெத்த, ஹிரிவடுன்ன பகுதியில் இறுதிக் கிரியை இடம்பெறவுள்ளது.

இறுதிச் சடங்குகள் நிறைவடையும் வரை அப்பகுதியில் அமைதியை நிலைநாட்ட முப்படையினரின் ஒத்துழைப்பை பெற்றுக்கொடுக்குமாறு பாதுகாப்புச் செயலாளரிடம் பொலிஸ்மா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்படி, பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் 12 (1) வது பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு இணங்க, 21.03.2022 அன்று வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி 2272/10 மூலம், கேகாலை மாவட்டத்துக்கு உட்பட்ட தேவாலேகம, ரம்புக்கன மற்றும் கேகாலை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு நேற்று முதல் இன்று வரை ஆயுதம் தாங்கிய முப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles