பாம்பு தீண்டி அரச அதிகாரி பலி:  மல்லாவியில் சோகம்!

மல்லாவியில் பாம்பு தீண்டி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வயலை பார்க்க சென்ற போதே நேற்று (11) மாலை இத்துயர் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

துணுக்காய் பகுதியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான திருநாவுக்கரசு கிருபாகரன் (55) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் மாந்தை கிழக்கு பிரதேச சபையின் வருமான பரிசோதகராக கடமை ஆற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உடலம் மல்லாவி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது

Related Articles

Latest Articles