கொட்டகலை பிரதேச சபைக்கு உரித்தான பத்தனை காட்டுமாரியம்மன் ஆலயத்துக்கு அருகாமையில் அமைந்துள்ள ஐந்து கடையறைகளுக்கான திறந்த கேள்வி கோரப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு அக்கடையறைகள் கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் இராஜமணி பிரசாந்த் தலைமையில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இக்கள ஆய்வில் கொட்டகலை பிரதேச சபையின் செயலாளர் வி. விஜேசுந்தரம் , தொழில்நுட்ப அதிகாரி ஹேரத் , அபிவிருத்தி உத்தியோகத்தர் ராஜகருணா மற்றும் வருமானப் பரிசோதகர் திரு சுந்தரராஜு ஆகியோர் கலந்துகொண்டனர்.
பத்தனை கடையறைகளை திறந்த கேள்வி கோருவதற்கான விண்ணப்பங்களை இலங்கையின் எப்பாகத்தில் உள்ளவர்களும் 22.06.2026 தொடக்கம் 13.07.2026 வரையில் கொட்டகலை பிரதேச சபைப் பணிமனையில் பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன் 14.07.2026 அன்று காலை 10.00 மணிவரையிலும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்.
14.07.2026 அன்று காலை 10.30 மணிக்கு கேள்விப்பெட்டி டெண்டர் குழுவின் முன்னிலையில் திறக்கப்படவுள்ளது.










