போர் நிறுத்தத்துக்கு ஹமாஸ் பச்சைக்கொடி!

இஸ்ரேல் உடனான தற்காலிக போர் நிறுத்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்துள்ளது. எகிப்து மற்றும் கத்தார் நாடுகளின் சமரச பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஹமாஸ் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் திகதி பாலஸ்தீன ஆதரவு பயங்கரவாத அமைப்பான ஹமாஸ் தாக்குதல் நடத்தியதில் இஸ்ரேல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இஸ்ரேல் நாட்டில் ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்ததோடு, நூற்றுக்கணக்கானோரை பணயக் கைதிகளாக சிறை பிடித்தும் சென்றனர் ஹமாஸ் படையினர்.

போர்நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில், அவர்களில் சிலரை இஸ்ரேல் மீட்டது. மீதமுள்ளவர்களையும் மீட்போம் எனக் கூறி வருகிறது. ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சபதம் எடுத்துள்ளார். தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் போரில் ஈடுபட்டு வருகிறது.

ஹமாஸ் அமைப்பின் பதுங்கு தளமான காசா மீது இஸ்ரேல் வான்வழி, தரைவழி தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வந்தது. இந்த தாக்குதல்களால் ஹமாஸ் படையினர் மட்டுமல்லாது ஏராளமான பாலஸ்தீன பொதுமக்களும் பலியாகினர். பலர் அங்கிருந்து வெளியேறி ரபா நகரில் தஞ்சமடைந்துள்ளனர்.

7 மாதங்களாக நடந்து வரும் போரில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காசா பகுதியில் உயிரிழந்து உள்ளனர் என்று கூறப்படுகிறது. இந்த 7 மாத கால போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு உலக நாடுகள் பெரும் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு உலக நாடுகள் முயற்சித்து வந்தாலும் இந்த பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தம் ஒன்றை எகிப்து மற்றும் கத்தார் நாடுகள் இணைந்து முன்மொழிந்தன.

இதனை ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு ஏற்றுக் கொண்டுள்ளது. போர் நிறுத்தத்திற்கு தயார் என தெரிவித்து உள்ளது. ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே, மத்தியஸ்தர்களான கத்தார் மற்றும் எகிப்துக்கு “போர்நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான அவர்களின் முன்மொழிவுக்கு ஹமாஸின் ஒப்புதலை” தெரிவித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதன் மூலம், தற்காலிகமாக போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரக்கூடும். காசாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு படையினர் திரும்பப் பெறப்படுவதற்கு ஈடாக, ஹமாஸ் அமைப்பு பிடித்து வைத்திருக்கும் பணயக் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இஸ்ரேலும், ஹமாஸின் நிபந்தனைகளை ஏற்க வேண்டும். அடுத்தடுத்த நாட்களில் இஸ்ரேலின் முடிவு தெரியவரும்.

முன்னதாக, போரை நிறுத்தினால் ஹமாஸ் மீண்டும் காசாவில் தங்களை வலுப்படுத்திக் கொண்டு தாக்குதல் நடத்துவார்கள் என்றும், இஸ்ரேல் ராணுவத்தை காசாவிலிருந்து திரும்ப பெறும் கோரிக்கையை ஏற்க முடியாது என்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles