அடுத்த வருடம் முதல் மத்திய வங்கியின் முழுமையான ஒத்துழைப்புடன், மத்திய வங்கி வருடாந்த அறிக்கைகள் குறித்து பாடசாலைகளில் கலந்துரையாடும் செயற்திட்டமொன்றை ஆரம்பிக்க தயாராக உள்ளதாகவும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் தேவையான பயிற்சிகளை மத்திய வங்கியின் ஊடாக வழங்க உள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
கண்டி நுகவெல மத்திய மகா வித்தியாலயத்தில் இன்று (31) நடைபெற்ற ‘மூலதனச் சந்தை பற்றிய சங்கங்களை’ நிறுவுவதற்கான தேசிய வேலைத்திட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.










