லுணுகலை – ஜனதாபுர , தம்பபிட்டிய வத்த கும்புக்கன் ஓயாவில் இருந்து 38 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயொருவர், தலைப் பகுதியில் காயமடைந்த நிலையில் நேற்று முன்தினம் (19) சடலமாக மீட்கப்பட்டார். இதனையடுத்து 17 வயதுடைய குறித்த பெண்ணின் மகள் தனது தாயின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து பொலிஸார் விசாரணை வேட்டையை ஆரம்பித்தனர். இதன்போது 36 வயதுடைய முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். அதன்பின்னர் தலைமறைவாகி இருந்த 45 வயதுடைய குறித்த பெண்ணின் கணவர் நேற்று இரவு லுணுகலை நகரில் வைத்து லுணுகலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையின்போது சிறிய கல் ஒன்றினால் தலை பகுதியை தாக்கியதாகவும் பின்னர் பெரிய கல் ஒன்றினால் தாக்கி கொலை செய்ததாக சந்தேக நபர் தெரிவித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இருவருக்கும் இடையே மிக நீண்ட காலமாக குடும்ப தகராறு காணப்பட்டதாகவும் இருவருக்கும் இடையே விவாகரத்து வழக்கு நடைபெற்று வருவதாகவும் பெண்ணின் வீட்டு பகுதிக்கு குறித்த நபர் செல்ல கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரை பொலிஸாரின் விசாரணைகள் நிறைவடைந்ததன் பின்னர் இன்றைய தினம் பசறை நீதிவான் நீதிமன்றதாதில் ஆஜர் படுத்த பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ராமு தனராஜா










