மன்னாரில் இருவர் சுட்டுக்கொலை

மன்னார், அடம்பன் முள்ளிக்கண்டல் பகுதியில் இன்று காலை இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுளளனர்.

ஈச்சலவக்கை , நொச்சிக்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 36 மற்றும் 49 வயதுடைய இருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர்.

வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தவேளையிலேயே, இவ்விருவர்மீதும் இனந்தெரியாதவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை அடம்பன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

Related Articles

Latest Articles