மரத்திலிருந்து விழுந்து இளம் குடும்பஸ்தர் பலி: தலவாக்கலை பொலிஸ் பிரிவில் சம்பவம்

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மடக்கும்பரை எம்.சீ.(புதுகாடு) தோட்டத்தில் மரத்தில் இருந்து இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மடக்கும்பரை எம்.சி (புதுகாடு) தோட்டப்பிரிவை சேர்ந்த நடராஜா கணகேஸ்வரன் (வயது 31) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மரமேறி விறகு வெடிகொண்டிருந்தவேளை குளவி தாக்குதலுக்கு இலக்காகி அவர் கீழே விழுந்துள்ளார் என தெரியவருகின்றது.

அவரோடு விறகு சுமக்கச் சென்ற மற்றும் ஒருவர் குளவி கொத்துக்கு இலக்காக மடக்கும் பறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கௌசல்யா

Related Articles

Latest Articles