மறைந்த பிரபல பாடகி விசாரத கலாநிதி நந்தா மாலனி அவர்களின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்று (21) இரவு இறுதி அஞ்சலி செலுத்தினார்.
நுகேகொட, நாவல வீதியில் அமைந்துள்ள அவரது வீட்டிற்குச் சென்று அன்னாரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி, அவரது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் கலைஞர்களுக்குத் தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்டார்.










