28,300 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 9,000 மெட்ரிக் தொன் விமான எரிபொருளுடன் மற்றொரு எண்ணெய் டேங்கர் கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்து சேர்ந்துள்ளது.
இதற்கான கொடுப்பனவாக சிங்கப்பூர் நிறுவனத்திற்கு 39.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, டீசல் தொகையை தரையிறக்கும் பணிகள் நாளை காலை ஆரம்பிக்கப்படும் என எரிசக்தி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நேற்று முன்தினம், 37,300 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிச் வந்த கப்பலுக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளதுடன், இதற்கமைய நாட்டின் டீசல் மற்றும் விமான எரிபொருள் இருப்பு நாளைய தினம் 74,600 மெட்ரிக் தொன்னாக இருக்கும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.










