ஆபிரிக்க நாடுகளான கொங்கோ மற்றும் ருவாண்டா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வந்தது. இதற்கிடையே இந்த இரு நாடுகளின் மோதலை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மத்தியஸ்தம் செய்தார்.
இதில் கொங்கோ, ருவாண்டா இடையே உடன்பாடு ஏற்பட்டது. இரு நாடுகளும் மோதலை கைவிட்டு அமைதிக்கு திரும்ப ஒப்புக்கொண்டன.
இதையடுத்து வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முன்னிலையில் கொங்கோ, ருவாண்டா இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதில் கொங்கோ ஜனாதிபதி பெலிக்ஸ் ஷிசெ கெடி, ருவாண்டா ஜனாதிபதி பால் ககாமே ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இந்த அமைதி ஒப்பந்தத்தை தொடர்ந்து கொங்கோவில் உள்ள கனிம வளங்களை அமெரிக்க நிறுவனங்கள் வெட்டி எடுக்க ஒப்பந்தமும் கையெழுத்தானது.
இது ஆப்பிரிக்காவிற்கு ஒரு சிறந்த நாள், உலகிற்கு ஒரு சிறந்த நாள். இன்று, பலர் தோல்வியடைந்த இடத்தில் நாம் வெற்றி பெற்று இருக்கிறோம். உலகம் முழுவதும் நாங்கள் அமைதியை நிலை நாட்டுகிறோம்.
இதுவரை யாரும் கண்டிராத அளவில் போர்களை நாங்கள் தீர்த்து வருகிறோம். இதுவரை 8 போர்களை தீர்த்துவிட்டேன். மேலும் இன்னொரு போரை தீர்க்க முயற்சி நடக்கிறது. அது ரஷியா- உக்ரைன் போர். அதனை நிறுத்த நாங்கள் மிகவும் கடினமாக உழைத்து வருகிறோம் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்தார்.










