“மலையகம் எங்கள் தாயகம், நாம் ஒரு தேசம் என்ற நிலைப்பாட்டில், அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்தவர். மலையக மக்கள் தனியொரு தேசிய இனமாக அடையாளப்படுத்தப்பட்ட வேண்டும் என்பதிழும், மலையக மக்களுக்கான தனியொரு அரசியல் அலகு உருவாக்கப்பட வேண்டும் என்பதிலும் முன்னின்று செயற்பட்டவர்.
பல்வேறு மாற்று நிலைப்பாடுகள், அரசியல் நெருக்கடிகள், கருத்து முரண்பாடுகள் எழுந்தபோதெல்லாம் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் விட்டுக்கொடுக்காமல், பின்வாங்காமல் தனது உறுதியான நிலைப்பாட்டில் இருந்தவர்.
பல அரசியல் தலைமைகளுக்கு பின்புலத்தில் பலம் சேர்த்து மக்கள் நலனுக்காக செயற்பட்டவர். எனினும் பிரதிநிதித்துவ அரசியலில் அவருக்கு வாய்ப்பு கிட்டவில்லை. அது ஒருவகையில் மலையக மக்களின் துர்ரதிஷ்டம் ஆகும். எது எவ்வாறாயினும் அன்றும் அவர் சொன்ன, இன்றும் அவர் விட்டுச்சென்ற, மலையக மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்காக முன்னின்று செயற்படுவது, நாம் அவருக்கு பெற்றுக்கொடுக்கும் கெளரவம் ஆகும்.
அவரது பிரிவால் துயரடையும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் குறிப்பிட்டார்.










