மலையக மக்கள் தொடர்பில் வழங்கிய உறுதிமொழிகளை ஜனாதிபதி நிறைவேற்ற வேண்டும்!

அனுர குமார திசாநாயக்க எதிர்க்கட்சியில் இருந்த போது மலையக மக்கள் மீதி மிகவும் அன்போடும் அக்கறையோடும் கருத்துகளை முன்வைத்து வந்தார். இப்போது அவர் ஜனாதிபதியாக அதிகாரத்தில் உள்ளதால் மலையக மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு முன்வர வேண்டும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

“மலையக 200 – திகாம்பரம் 20” பாராளுமன்ற உரைகள் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா நேற்று 02.11.2024 அட்டன் டி.கே.டபுள்யூ. கலாசார மன்டாதில் இடம்பெற்ற போது ஏற்புரை நிகழ்த்துகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவர் எம். உதயகுமார் உட்பட பலர் கலந்து கொண்ட இந்நிகழ்வில் அவர் தொடர்ந்து பேசுகையில்,

எனது அரசியல் வாழ்க்கைக்கு 20 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு இந்த நூல் வெளியிடப்படுகிறது. வெறுமனே விழாமபரதுக்காக என்று இல்லாமல் எனது உண்மையான சேவை மக்களுக்குப் போய்ச் சேர வேண்டும் என்பதே நோக்கமாகும். 6 வருடங்கள் மாகாண சபையிலும் 14 வருடங்கள் பாராளுமன்றத்திலும் இருந்துள்ளேன். பிரதியமைச்சராக, கெபினட் அமைச்சராக இருந்ததோடு, நல்லாட்சி அரசாங்கத்தில் மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சராக பதவியேற்று தலா ஏழு பேர்ச் காணியில் தனி வீட்டுத் திட்டத்தையும் இந்திய வீடமைப்புத் திட்டத்தையும் நடைமுறைப்படுத்திக் காட்டினேன்.

நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச சபைகள், செயலங்களை அதிகரித்ததோடு, மலையகத்துக்கென தனியான அதிகார சபையையும் உருவாக்கினேன். பிரதேச சபையின் ஊடாக தோட்டங்களுக்கு அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள முடியாது என்று இருந்த பிரதேச சபை சட்டத்தில் திருத்தத்தைக் கொண்டு வந்ததால் அதன் சேவையை தோட்ட மக்களும் பெற்றுக் கொள்ள முடிந்தது.

நான் தோட்டத் தொழிலாளியின் மகனாகப் பிறந்து தோட்டத்தில் வாழ்ந்து அந்த மக்களின் கஷ்ட நஷ்டங்களை புரிந்து வைத்திருந்ததால் மலையக மக்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற சிந்தனையோடு, அரசியலில் பிரவேசித்த போது, பல்வேறு எதிர்ப்புகளையும், சவால்களையும் சந்திக்க நேர்ந்தது. எனினும், தோட்ட மக்களோடு வாழ்ந்த அனுபவம் இருந்த காரணத்தால் எனது அரசியல் பயணத்தை இலகுவாக மேற்கொள்ளக் கூடியதாக இருந்தது.

எனது அரசியல் பயணத்தில் மனோ, இராதா, உதயா ஆகியோர் உறுதுணையாக இருந்ததோடு, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்றத்தில் மிகுந்த ஒத்துழைப்பை வழங்கி வந்துள்ளார். நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் கண்டி மாவட்ட தமிழ் மக்கள் ரவூப் ஹக்கீமுக்கு ஒரு விருப்பு வாக்கை அளித்து அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.

 

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles