மஸ்கெலியாவில் குளவிக்கொட்டு: 40 பேர் பாதிப்பு

மஸ்கெலியா, புரவுன்சீக் தோட்ட புரவுன்சீக் பிரிவில் தேயிலை கொழுந்து கொய்து கொண்டிருந்த 40 தொழிலாளர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இன்று காலைவேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அவர்கள் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட 40 பெண்களில் 37 பேர்; சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பிய தாகவும் மூன்று பெண்கள் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என மாவட்ட வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

மஸ்கெலியா நிருபர். செ.தி பெருமாள்

Related Articles

Latest Articles