– கௌசல்யா
மஸ்கெலியா-பிரவுன்லோ இளைஞர்களினால் அண்மையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட “மலையக சமூக நலநோக்கு அமைப்பு” கடந்த வாரம் தனது முதலாவது வேளைத்திட்டத்தினை பிரவுன்லோ ஆலயத்தின் பெயர்பலகை மற்றும் மின் விளக்குகள் பொருத்துவதனூடாக ஆரம்பித்து வைத்தது.

மேலும் இரண்டாவது வேலைத் திட்டமாக மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நல்லதண்ணி-முல்லுகாமம் கீ.பி தோட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட ஊனமுற்றவர்களுக்கான உலர் உணவு பொருட்களை 18.09.2021 சனிக்கிழமை வழங்கி வைத்தது.

உதவி நல்கிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக “மலையக சமூக நலநோக்கு அமைப்பு” தெரிவித்த அதே வேளை,மேலும் எமது அமைப்பு சார்ந்த வேலைத்திட்டங்கள் தொடரும் என்பதனையும் தெரிவித்தனர்.











