மஸ்கெலியா சுகாதார பிரிவில் 15 நாட்களில் 50 பேருக்கு கொரோனா!

கடந்த 15 தினங்களில் மஸ்கெலியா பொது சுகாதார பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 50 பேர் covid-19 தொற்றாளர்களாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களும் 4 வயதுடைய சிறுவன் ஒருவரும் இருப்பதாகவும் பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் நரேந்திர குமார் தெரிவித்தார்.

அதேபோல் குறித்த பிரதேசத்தில் இதுவரை 6 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் எனவும் அவர் கூறினார்.

எனவே இவ்வாறான சூழ்நிலையில் மஸ்கெலியா பிரதேசத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்றுமாறு வினயமாக கேட்டுக் கொள்வதுடன் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தும்போது சகலரும் சுகாதார முறைகளை நடந்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கின்றார்.

ஏனெனில் மரணித்தவர்களுள் Covid 19 தடுப்பூசியை ,செலுத்தியவர்களும் இருப்பதாகவும் அவர் கூறுகின்றார்.

முகக் கவசம் அணியாமல் முறையாக அணியாமல் சமூக இடைவெளிகளை பேனா மை சுய பாதுகாப்பு தொடர்பில் அலட்சியமாக இருக்கின்றமை போன்ற பல்வேறு விடயங்களை தொடர்ந்தும் பொதுமக்கள் செய்து வருவதன் காரணமாகவே இவ்வாறான இழப்புகளை சந்திக்க வேண்டி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதார நிலைமை கருத்திற்கொண்டு அரசாங்கத்தினால் சில நகர்வுகளை முன்னெடுத்து வருகின்ற போதிலும் மக்கள் முழுமையான சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தமது கருமங்களில் ஈடுபட்டால் மாத்திரமே ஏற்படக்கூடிய பேரிழப்பை தவிர்த்துக்கொள்ள முடியும் என்றும் நரேந்திர குமார் மேலும் தெரிவித்தார்.

எஸ். கௌசல்யா

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles