மஸ்கெலியா சென் ஜோசப் கல்லூரியில் இருந்து இரு மாணவர்கள் மருத்துவ பீடத்திற்கு தெரிவு

மஸ்கெலியா சென். ஜோசப் கல்லூரி வரலாற்றில் முதல் முறையாக இரு மாணவர்கள் மருத்துவ பீடத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

2022 உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் சென். ஜோசப் கல்லூரியில் கலைப்பிரிவில் 95% சித்தியும், வணிக பிரிவில் 83% சித்தியும் , உயிரியல் மற்றும் பௌதீக விஞ்ஞான பிரிவில் 50% சித்தியும் பெற்று மாணவர்கள், கல்லூரிக்கும் கற்பித்த ஆசிரியர்களுக்கும் பெறுமை தேடித்
தந்துள்ளனர் என கல்லூரி முதல்வர் நல்லையா பரமேஸ்வரன் தெரிவித்தார்.

மஸ்கெலியா நிருபர் செதி பெருமாள்

Related Articles

Latest Articles