மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்தின் அணுகுமுறை மாறும்வரை தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் என்று இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

கிரேக் தோட்ட தொழிற்சாலையில் உள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர்களை இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் சந்தித்தார்.

இச்சந்திப்பின் போது மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனம் தொழில் சட்டத்தை தொடர்ந்து மீறுவது குறித்தும் தோட்டத் தொழிலாளர்கள் மீதான நவீன அடிமைத்தனம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

தொழிலாளர்களின் உரிமைகள் மீட்கப்பட்டு, நிர்வாகத்தின் அணுகுமுறை மாறும் வரை தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் தேயிலை, தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றுவது நிறுத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
