9ஆவது பாராளுமன்றத்தின் சபாநாயகராக மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் பெயரை முன்மொழிவதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.
சபாநாயகர் பதவியை ஏற்குமாறு சமல் ராஜபக்சவிடம் விடுக்கப்பட்ட கோரிக்கையை அவர் நிராகரித்துள்ள நிலையிலேயே , அந்த வாய்ப்பு மஹிந்த யாப்பாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
புதிய பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது. அதன்போது மஹிந்த யாப்பா பதவியேற்பார்.