மஹியங்கனை பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் இருவர் கைது

மஹியங்கனை நகரில் ஹெரோயின் போதைப் பொருள் தன் கைவசம் வைத்திருப்பதாக மஹியங்கனை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து மஹியங்கனை நகரில் சந்தேகத்திற்கு இடமான இரு நபர்களை மஹியங்கனை குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் சந்தேக நபர்களை சோதனைக்கு உட்படுத்திய போது ஒரு சந்தேக நபரிடம் 15200மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.

மஹியங்கனை பகுதியை சேர்ந்த 22வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் ஒரு சந்தேக நபரை சோதனைக்கு உட்படுத்திய போது அவரிடம் 5100 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மிட்கப்பட்டுள்ளது மஹியங்கனை பகுதியை சேர்ந்த 23 வயதுடைய நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இரு சந்தேக நபர்களையும் விசாரணையின் பின் இன்று மஹியங்கனை நீதமான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்

ராமு தனராஜா

Related Articles

Latest Articles