” மாகாணசபைத் தேர்தலை ஒத்திவைக்கும் எவ்வித திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை.” – என்று பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சிசபை அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் சாணக்கியன் எம்.பி. எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” மக்கள் பிரதிநிதித்துவம் உள்ள சபைகள் பலப்படுத்தப்படும் என்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் உள்ளது. எனவே, கடந்த காலங்களில்போன்று தேர்தல்கள் ஒத்திவைக்கப்படமாட்டாது. எந்தவொரு தேர்தலையும் ஒத்திவைக்கும் எண்ணம் இல்லை. தடைகள் இருந்தால் அவற்றை நீக்கி தேர்தலை நடத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.” -எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.










