மாகாணசபைத் தேர்தல்வரை தலைமைப்பதவியில் ரணில் நீடிப்பார்!

மாகாணசபைத் தேர்தல் நிறைவடையும்வரை ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைப்பதவியில் ரணில் விக்கிரமசிங்க நீடிப்பார் என அறியமுடிகின்றது.

ஐக்கிய தேசியக்கட்சியின் மத்தியசெயற்குழுக் கூட்டம் கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று (14) கூடியது.

இதன்போது பொதுத்தேர்தலில் படுதோல்வி ஏற்பட்டதற்கான காரணங்கள் ஆராயப்பட்டன. கட்சி உறுப்பினர்கள் பலகோணங்களில் கருத்துகளை முன்வைத்தனர்.

எனினும், கட்சி தலைமைப்பதவியானது இளம் தலைவரொருவருக்கு வழங்கப்பட வேண்டும் என்பது பெரும்பாலானவர்களின் கருத்தாக இருந்தது.

இதன்படி கட்சி தலைமைப்பதவிக்கு போட்டியிடும் அனைவருக்கும் வாய்ப்பளிப்பதற்கும், கட்சி தொண்டர்களின் கோரிக்கைக்கமைய புதிய தலைவரை தெரிவுசெய்வதற்கும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், உடனடியாக தலைமைப்பதவியில் மாற்றம் வருவதற்கு இடமில்லை. மாகாணசபைத் தேர்தல் முடிவடையும்வரை அல்லது மாகாணசபைத் தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்படும்வரை தலைமைப்பதவியில் ரணில் நீடிப்பார் என அறியமுடிகின்றது.

புதிய தலைவருக்கு பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டு அவர் எவ்வாறு தேர்தலை கையாள்கிறார் என்பது கண்காணிக்கப்படும்.

Related Articles

Latest Articles