மாத்தளையில் 119 – கண்டியில் 86 – நுவரெலியாவில் 54 பேருக்கு நேற்று கொரோனா!

மத்திய மாகாணத்திலும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவிவருகின்றது.

மாத்தளை மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 119 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை அம்மாவட்டத்தில் ஆயிரத்து 554 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

கண்டி மாவட்டத்தில் நேற்று 86 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் இதுவரை மொத்தமாக 5 ஆயிரத்து 725 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் நேற்று 54 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அம்மாவட்டத்தில் இதுவரை ஆயிரத்து 361 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

Related Articles

Latest Articles