மினுவங்கொட தொழிற்சாலை – மேலும் 3 பெண்களுக்கு கொரோனா!

மினுவங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மேலும் மூன்று பெண்களுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேற்படி தொழிற்சாலையில் வேலைசெய்யும் இரு பெண்கள் குருநாகலில் உள்ள தங்களது வீடுகளுக்கு சென்றிருந்த நிலையில் குருநாகல் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையின்போதே வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

அதேவேளை, 41 வயதுடைய மற்றுமொரு பெண் மொனராகலை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவருக்கும் கொரோனா தொற்று இருப்பது பிசிஆர் பரிசோதனைமூலம் உறுதியாகியுள்ளது.

இம்மூவரும் அங்கொடை ஐடிஎச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். தொடர்பை பேணியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles