மின் கட்டணத்தை 20 வீதத்தால் குறைக்க யோசனை!

மின் கட்டணத்தை சுமார் 20 வீதத்தால் குறைப்பதற்கான புதிய யோசனையை இலங்கை மின்சார சபை முன்வைத்துள்ளது.

இந்த புதிய யோசனை இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் நாளை(22) கையளிக்கப்படவுள்ளது.

மின் கட்டணத் திருத்தம் தொடர்பில் கடந்த 15ஆம் திகதி பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளை ஆராய்ந்ததன் பின்னர் புதிய யோசனையை முன்வைக்குமாறு இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபைக்கு அறிவித்திருந்தது.

Related Articles

Latest Articles