முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிமரசிங்கவுக்கு மீண்டும் பாராளுமன்றம் செல்லும் எண்ணம் இல்லை. இது பற்றி அவர் என்னிடமும் கூறியுள்ளார் – என்று முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
நாட்டுக்கு அவரின் சேவை தேவையெனில் , நாட்டுக்காக அதனை செய்வார் எனவும் குறிப்பிட்டார்.
அத்துடன், தேசிய மக்கள் சக்தி ஆட்சியின்கீழ் ஊடக அடக்குமுறை இடம்பெறுவதாகவும் குற்றஞ்சாட்டினார்.










