முகத்துவாரம் பகுதியில் முதியோர் இல்லத்தில் 42 பேருக்கு கொரோனா!

கொழும்பு – முகத்துவாரம் பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தொற்றுக்குள்ளானோரை, சிகிச்சைகளுக்காக அனுப்பியுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.

98 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறித்த முதியோர் இல்லத்தில் அண்மையில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.இதையடுத்து முதியோர் இல்லங்களில் உள்ள மற்றய அனைவரும் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.

அதில் மேலும் 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles