முன்னாள் ஜனாதிபதியின் ரிட் மனு ஜூலையில் விசாரணைக்கு

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள தனிப்பட்ட முறைப்பாட்டினை சவாலுக்கு உட்படுத்தி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்த ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் ஐவர் அடங்கிய அமர்வு ஜூலை 31 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் நீதியரசர் ஏ மரிக்கார் ஆகியோர் அடங்கிய இரு உறுப்பினர் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள தனிப்பட்ட மனு மீதான விசாரணையை 10 வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு முன்னர் உத்தரவிட்டிருந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி சிறிசேன தாக்கல் செய்த ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் பரிசீலித்த போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை முன்னரே புலனாய்வுத் தகவல்கள் இருந்தும் தடுக்க முடியாமல் போனதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாடு தொடர்பில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு தம்மை அழைப்பாணை விடுத்த நோட்டீசை இடைநிறுத்துமாறு முன்னாள் ஜனாதிபதி சிறிசேன தனது மனுவின் மூலம் நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர் மற்றும் புனிதர் சிறில் காமினி ஆகியோர் செய்த முறைப்பாட்டினை பரிசீலித்த கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம், பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி சிறிசேனவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்பியுள்ளது.

செவிவழிச் செய்திகளின் அடிப்படையில் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரிட் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மேற்படி சாட்சியங்களின் அடிப்படையில் நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் விடுத்த அழைப்பாணை சட்டத்திற்கு முரணானது எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, தனக்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வரும் வழக்கை இடைநிறுத்தி இடைக்கால உத்தரவை பிறப்பிக்குமாறும், அழைப்பாணை செல்லுபடியற்ற உத்தரவு பிறப்பிக்குமாறும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்படி இந்த வழக்கு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஐவர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles