மேலும் 400,000 பைஸர் தடுப்பூசிகள் சற்று முன்னர் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதன்மூலம் இந்த வாரத்திற்குள் 1,900,000 தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
அதேநேரம் அடுத்த மாதம் முதல் வாராந்தம் தலா 3,000,000 பைஸர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கிடைக்கப்பெறும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
