பதுளை மாநகர சபையின் அனைத்து செயற்பாடுகளும் இடைநிறுத்தப்பட்டு, அச்சபையின் அனைத்து அதிகாரங்களும் விசேட ஆணையாளரின் பொறுப்பில்விட ஊவா மாகாண ஆளுனர் ஏ.ஜே.எம். முசாம்மில் முடிவுசெய்துள்ளார். இதற்கமைய பதுளை மாநகரசபையின் பொறுப்பு, விசேட ஆணையாளரின்கீழ், (இன்றுமுதல்) 11-02-2021 கொண்டுவரப்பட்டது.
பதுளை மாநக ரமேயருக்கு பெரும்பான்மை பலம் இல்லாமையினால், சபையின் அனைத்து செயற்பாடுகளும் நிறுத்தப்பட்டிருந்தன. அதனாலேயே, இம்முடிவினை மேற்கொண்டதாக ஆளுனர்ஏ.ஜே.எம். முசாம்மில் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆட்சியின்கீழ், பதுளை மாநகரசபை இயங்கிவந்தது. அதன்படி பதுளை மாநகர மேயர் பதவி ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வசமும், பிரதி மேயர் பதவி ஸ்ரீலங்காசு தந்திரக்கட்சிவசமும் இருந்துவந்தன.
அதனையடுத்து, இவ்விருகட்சிகளிடம் தலா இரண்டு வருடங்கள் என்றடிப்படையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றும் ஏற்படுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில் பதுளை மாநகரசபையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சார்பான ஐந்து உறுப்பினர்களும், ஒப்பந்தத்தைமீறி, மேயருக்கு எதிராக செயற்பட்டதையடுத்தே, சபையின் பெரும்பான்மை பலத்தை மேயர்பிரியந்த அமரசிரி இழந்திருந்தார்.
இதனாலேயே, தொடர்ந்து சமர்ப்பிக்கப்பட்டவரவு – செலவுத்திட்டநிதி அறிக்கை மூன்று முறைகளிலும் தோல்விகண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
எம்.செல்வராஜா, பதுளை










