ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக ரணில் விக்கிரமசிங்கவை பெயரிடுமாறுகோரும் ஆவணத்தை தேர்தல் ஆணைக்குழுவிடம், ஐ.தே.கவின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார இன்று கையளித்தார்.
அதன்பின்னர் இது தொடர்பான அறிவித்தல் அடங்கிய அரசிதழை தேர்தல் ஆணைக்குழு வெளியிடும்.
எதிர்வரும் 22 அல்லது 23 ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினராக ரணில் விக்கிரமசிங்க சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.










