ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பன ஒன்றிணைந்து செயல்படுவது ஜனநாயக அரசியலுக்கு நல்லது என்று ஸ்ரீலங்காபொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பனர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச ஆகியோர் இணைந்து செயல்பட வேண்டும் என்பதை கடந்த ஜனாதிபதி தேர்தலின்போதும் தான் வலியுறுத்தி இருந்தாகவும் நாமல் குறிப்பிட்டார்.










