” அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரைக் களமிறக்கி ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வெற்றிவாகை சூடும்.” என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று தெரிவித்தார்.அந்த பொதுவேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவாகக்கூட இருக்கலாம் எனவும் அவர் கூறினார்.
ரணிலுக்கு உதவுவதற்கு தனிப்பட்ட ரீதியில் தான் தயார் எனவும் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டார்.
அத்துடன், பிரதமர் பதவியில் எவ்வித மாற்றமும் வராது எனவும் அவர் குறிப்பிட்டார்.