ரணிலை ஆலோசகராக ஏற்பாரா சஜித்?

” சிரேஷ்ட அரசியல் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவை, ஆலோசகராக நியமித்துக்கொள்ளுங்கள். அப்போது சிறந்த ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளலாம்.”

இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார் விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே.

நாடாளுமன்றத்தில் இன்று சீன உரக்கப்பல் தொடர்பிலும், விவசாயிகளின் பிரச்சினைகள் சம்பந்தமாகவும் சஜித் பிரேமதாச கேள்விகளை எழுப்பினார்.

இதன்போதே விவசாயத்துறை அமைச்சர், மேற்கண்டவாறு ஆலோசனை வழங்கினார்.

” ரணிலை சந்திக்கவும். வெற்றியை வழங்கி மன்னிப்பு கோரவும். அவரிடம் ஆலோசனை பெறவும். அப்போது சரியான கேள்விகளை எழுப்பிலாம்.”- என்றார் அமைச்சர் மஹிந்தானந்த.

அத்துடன், விவசாயிகளை இந்த அரசு ஒருபோதும் கைவிடாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles