ரணிலை ராஜபக்சக்கள் கைவிட்டது ஏன்? வெளியான பகீர் தகவல்

தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் வாக்குகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பெற்றுக்கொடுத்து அவரை பலப்படுத்தும் நோக்கிலேயே தனி வேட்பாளர் ஒருவரை களமிறக்கும் முடிவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி எடுத்திருக்கக்கூடும் – என்று நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ ஜனாதிபதி தேர்தலில் தமக்கு ஆதவு வழங்குமாறுகோரி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனுப்பியுள்ள கடிதத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி நிராகரித்துள்ளது. மொட்டு கட்சியின் சார்பில் தனி வேட்பாளர் களமிறக்கவும் அக்கட்சி முடிவெடுத்துள்ளது.
பலவீனமான ரணிலை மேலும் பலவீனப்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதா அல்லது பலவீனமான ரணிலை பலப்படுத்தும் நோக்கில் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டதா என்ற சந்தேகம் எமக்கு உள்ளது.

தமிழீழத்துக்காக குரல் கொடுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு, ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதற்கு தடையாக இருக்கும் ஒரே காரணி, ராஜபக்சக்கள் அரசுடன் இருப்பதாகும்.

அதேபோல கொரோனா காலத்தில் முஸ்லிம்களின் ஜனாசாக்களை எரித்த ராஜபக்சக்கள் அரசாங்கத்தில் இருப்பதுதான் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதற்கு சில முஸ்லிம் கட்சிகளுக்கு தடையாக உள்ள காரணியாகும்.

ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ளவர்களுக்கு மீள ஐக்கிய தேசியக் கட்சி பக்கம் செல்வதற்கு தடையாக இருக்கும் காரணி, ராஜபக்சக்கள் அரசுடன் இருப்பதாகும். எனவே, ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் நோக்கில்கூட ராஜபக்சக்கள் இந்த முடிவை எடுத்திருக்ககூடும்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles