ரணில் பிரதமராக நான் வழிவகுத்துள்ளேன்- சரத் பொன்சேகா

தற்போதே பிரதமர் பதவியை பொறுப்பேற்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தம்மிடம் கோரியதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பாராளுமன்றில் இன்று தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்குவதற்கு முன்னர், ஜனாதிபதி தம்மை அழைத்து, பிரதமர் பதவியை ஏற்குமாறு கோரினார்.

எனினும் தாம் நான்கு நிபந்தனைகளை விதித்த நிலையிலேயே ரணில், பிரதமராக்கப்பட்டுள்ளார்.

எனவே, ரணில் பிரதமராவதற்கு தாமே வழிவகுத்துள்ளதாக சரத் பொன்சேகா உரிமைக் கோரினார்.

இதேவேளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இன்றைய பாராளுமன்ற உரை தொடர்பில், கருத்துரைத்த அவர், பிரதமர் தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வுகளை அறிவிக்கவில்லை என்று குறிப்பிட்டார். தம்மை நாடாளுமன்றுக்கு அழைத்து வந்தமைக்கு ரணில் விக்கிரமசிங்க உரிமை கோருகிறார்.

Related Articles

Latest Articles