ராஜபக்சக்களுடனான உறவை முறித்துக்கொண்டது சுதந்திரக்கட்சி!

” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசுடன் எமக்கு இனி எவ்வித உறவும் கிடையாது. ராஜபக்சக்கள் வேண்டாம் என போராடும் மக்கள் பக்கம்தான் நாம் நிற்கின்றோம்.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன அறிவித்தார்.

சுதந்திரக்கட்சி தலைமையகத்தில் கொழும்பு மாவட்ட அமைப்பாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு அறிவிப்பு விடுத்தார்.

” அரசுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் சாந்த பண்டார என்னிடம் எதுவும் கலந்துரையாடவில்லை. ஏன்! தொலைபேசி வாயிலாகக்கூட உரையாற்றவில்லை. தனது அரசியல் வாழ்க்கையை அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். மூழ்கும் கப்பலில் ஏறியுள்ளார்.

ராஜபக்சக்களுடன் எமக்கு இனி தொடர்பு – உறவு கிடையாது. கடிதம் அனுப்பினோம், யோசனைகளை முன்வைத்தோம். ஆனால் மாறுவதாக தெரியவில்லை.

எனவே, ராஜபக்சக்களை வெளியேற கோரி போராடும் மக்கள் பக்கம்தான் நாம் நிற்கின்றோம். ” – என்றும் மைத்திரிபால சிறிசேன கூறினார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles