ரூ. 1700: நரியிடம் சிக்கிவிட்டதா சேவல்?

“ பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதனை பாராட்டுகின்றோம், வாழ்த்துகின்றோம்.” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

“ தந்திரமான – நரித்தனமான அரசியல்வாதிகள் உள்ளனர் என்பது எனக்கு நன்றாக தெரியும். இதனை இதொகா நண்பர்களுக்கு சொல்லி வைக்க விரும்புகின்றேன்.” – எனவும் கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது மனோ கூறினார்.

ஆகவே, பொறுமையாக இருங்கள், சாதித்துவிட்டதாக கொக்கரிக்க வேண்டாம், அது பிழை. நிதானமாக செயற்படுங்கள். சம்பள உயர்வு என்பது இடைக்கால தீர்வுதான். எனவே, நரிகளிடம் ஏமாந்துவிட வேண்டாம் எனவும் மனோ குறிப்பிட்டார்.

 

 

Related Articles

Latest Articles