லிந்துலை, அகரகந்தை ஆற்றில் பெண்ணின் சடலம்!

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகசேனை தபால் அலுவலகத்தின் பின் பகுதியில் உள்ள அகரகந்தை ஆற்றில், பெண்ணொருவரின் சடலம் காணப்படுகின்றது என்று எமது செய்தியாளர் தெரிவித்தார்.

நாகசேனையில் இலிருந்து தலவாக்கலை பகுதியை நோக்கி பயணித்த பயணிகள் குறித்த ஆற்றில் சடலம் ஒன்று கிடப்பதை அவதானித்து இது தொடர்பாக லிந்துலை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

சடலமாக தண்ணீரில் கிடக்கும் பெண் யார் என்பது தொடர்பில் இதுவரையும் தகவல் கிடைக்கப்பெறவில்லை என விசாரணைகளை ஆரம்பித்துள்ள லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் கவனத்துக்கும் கொண்டுவரப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு நீதவான் வருகை தந்து சடலத்தை பார்வையிட்ட பின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கௌசல்யா

Related Articles

Latest Articles